Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடுவானில் விமான ஊழியர்களை சரமாரியாக தாக்கிய பெண்.. அதிர்ச்சி சம்பவம்

Flight
, செவ்வாய், 31 ஜனவரி 2023 (09:49 IST)
நடு வானில் விமான ஊழியர்களை சரமாரியாக பெண் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அபுதாவியிலிருந்து மும்பை வந்து கொண்டிருந்த விஸ்தாரா விமானத்தில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் சாதாரண வகுப்பில் டிக்கெட் எடுத்த நிலையில் சொகுசு வகுப்பில் இடம் காலியாக இருந்ததால் அங்கு சென்று உட்கார்ந்து இருந்தார்.
 
இதனை அடுத்து விமான ஊழியர்கள் அவரை சாதாரண வகுப்பு இருக்கையில் அமருமாறு கூறினர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து அந்த பெண் ஊழியர் திடீரென விமான ஊழியர்களை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. 
 
இந்த நிலையில் விமானம் மும்பை இறங்கியவுடன் விமான ஊழியர்களின் புகாரின் அடிப்படையில் இத்தாலியைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதானியால் மீளவே முடியாத பங்குச்சந்தை.. மீண்டும் சென்செக்ஸ் சரிவு!