Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லா முதலீட்டையும் குஜராத்துக்கு திருப்பிவிடும் மோடி? - மு.க.ஸ்டாலினை தொடர்ந்து தெலுங்கானா முதல்வரும் குற்றச்சாட்டு!

Prasanth Karthick
புதன், 13 நவம்பர் 2024 (10:53 IST)

பிரதமர் நரேந்திர மோடி பிற மாநிலங்களுக்கு வரும் முதலீடுகளை குஜராத்திற்கு மாற்றி விடுவதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

 

 

இந்திய அளவில் பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள மாநிலங்களாக குஜராத், மத்திய பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் விளங்கி வருகின்றன. இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு முதலீடுகளை சமீபமாக மத்திய அரசு தங்களுக்கு ஆதரவான மாநிலங்களுக்கு மட்டும் ஒதுக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய முதலீடுகள் குஜராத்திற்கு மடைமாற்றம் செய்யப்பட்டதாக சமீபத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார்.
 

ALSO READ: ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைதானவருக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் சிகிச்சை..!
 

இந்நிலையில் அவரை தொடர்ந்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் அதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “எதிர்கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்களை முடித்துக்கட்ட பிரதமர் மோடி துடிக்கிறார். தெலுங்கானாவிற்கு வரவேண்டிய செமிகண்டெக்டர் தொழிற்சாலையை பிரதமர் அலுவலக அதிகாரிகள் குஜராத்திற்கு மடைமாற்றியிருக்கிறார்கள். நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமர். ஆனால் குஜராத்திற்கு பிரதமர் போல செயல்படுகிறார்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments