Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் ஏன் அழைக்கப்படவில்லை? ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு..!

Mahendran
திங்கள், 3 பிப்ரவரி 2025 (16:56 IST)
அமெரிக்க அதிபராக சமீபத்தில் டிரம்ப் பதவியேற்ற போது, இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
 
இந்த விழாவிற்கு பிரதமர் மோடி எதற்காக அழைப்பு விடுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
"இந்தியாவில் வலுவான அமைப்பு இல்லை. அவ்வாறு இருந்திருந்தால், பிரதமரை அழைக்க அமெரிக்க அதிபர் விரும்பியிருப்பார். இந்தியாவில் உற்பத்தித் துறை வலுவாக இல்லை என்பதால் தொழில் பங்கு குறைவாக உள்ளது. அந்த தொழில்நுட்பங்களில் நாம் பணியாற்றியிருந்தால், இந்நேரம் அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு நேரடியாக வந்து, பிரதமரை அழைத்திருப்பார். எங்களுடைய பிரதமருக்கு அழைப்பு விடுங்கள் என்று வெளியுறவுத்துறை அமைச்சரை நாம் பலமுறை அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது," என்று கூறினார் ராகுல் காந்தி.
 
ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பதிலளித்துள்ளார். "எதிர்க்கட்சித் தலைவர் ஆதாரமற்ற ஒரு அறிக்கையை வெளியிடக்கூடாது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பற்றியது. டிரம்ப் விழாவுக்கு பிரதமரின் அழைப்பு குறித்து அவர் கூறிய கருத்துக்கள் அனைத்தும் ஆதாரமற்றவை," என்றும், "ராகுல் காந்தி தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்," என்றும் தெரிவித்தார்.
 
இதனை அடுத்து, "உங்கள் மன அமைதியை குறைத்ததற்காக மட்டும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்," என்று ராகுல் காந்தி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் மழைக்கு வாய்ப்பில்லை, வறண்ட வானிலை தான்: வானிலை ஆய்வு மையம்..!

உண்மையை மௌனமாக்கவே முதல்வரின் இரும்புக்கரம் பயன்படுகிறதா? அண்ணாமலை

இன்ஸ்டாவில் காதல்.. சொல்லியும் கேக்கல..! மகளுக்கு முட்டை பொறியலில் விஷம் வைத்த தாய்! என்ன நடந்தது?

ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு போகலையா சார்? கிரிக்கெட் பார்க்க சென்ற நாராயணமூர்த்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

கும்பமேளாவில் பக்தர்கள் பலியான விவகாரம்.. பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments