Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கும். திமுக.. தேதி அறிவிப்பு..!

Mahendran
திங்கள், 3 பிப்ரவரி 2025 (16:47 IST)
டெல்லியில் திமுகவின் மாணவர் அணி ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மாணவர்களின் கல்வி உரிமை மற்றும் தமிழ்நாட்டின் மாநில உரிமையை காப்பாற்ற, "யுஜிசி வரைவு அறிக்கை 2025" திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, டெல்லியில் திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த ஆர்ப்பாட்டம் பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெறும் என்றும், திமுக தலைமை அறிவித்துள்ளது. மாநில உரிமைகளை காப்பாற்ற நாம் அனைவரும் இந்த மாநாட்டிற்கு அணி திரள வேண்டும் என திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எல். எழிலரசன் அழைப்பு விடுத்துள்ளார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னால் யுஜிசி சில விதிமுறைகளை அறிவித்தது. அந்த விதிமுறைகள் மாநில உரிமையை பறிக்கும் வகையில் உள்ளதாக, திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. மேலும், இந்த புதிய விதிமுறைகளை அமல்படுத்தக்கூடாது என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமருக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments