Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீட் தேர்வை ஆன்லைன் மூலம் ஏன் நடத்தக் கூடாது? சுப்ரீம் கோர்ட் கேள்வி

நீட் தேர்வை ஆன்லைன் மூலம் ஏன் நடத்தக் கூடாது? சுப்ரீம் கோர்ட் கேள்வி
, புதன், 29 ஜூலை 2020 (16:26 IST)
மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு ஏற்கனவே இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது செப்டம்பர் 13 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது 
 
இந்த நிலையில் செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கான மையத்தை வளைகுடா நாடுகளில் ஏற்படுத்த வேண்டும் என்றும் அல்லது நீட்தேர்வை ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்றும் வழக்கு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது
 
இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்தபோது ’வளைகுடா மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் ஏன் நீட் தேர்வு நடத்தக்கூடாது? என மருத்துவ கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது 
 
உச்சநீதிமன்றத்தின் இந்த கேள்விக்கு விரைவில் மருத்துவ கவுன்சில் பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நேரடி தேர்வாக மட்டுமே நீட் தேர்வில் நடந்துள்ள நிலையில் முதல் முறையாக ஆன்லைனில் நீட் தேர்வு நடைபெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

50 அரசு கல்லூரிகளில் இனி ஒரே ஷிப்ட் முறைதான்! – தமிழக அரசு அரசாணை!