Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் இளைஞர்கள் அதிகளவில் பாதிப்படைவது ஏன் ? ஐசிஎம்ஆர் இயக்குநர் விளக்கம்

Webdunia
புதன், 12 மே 2021 (21:53 IST)
கொரொனா இரண்டாம் கட்ட அலையில் பெரும்பாலும் இளைஞர்களே பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில் இது ஏன் இளைஞர்களை அதிகம் பாதிக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஒருநாளில் சுமார் 4 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
கொரொனா தடுப்பூசியாக கோவிஷீல்ட், வேக்‌ஷின் போன்றவை பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் கொரொனா இரண்டாம் அலையில் பெரும்பாளும் 25 வயதிற்கு மேலுள்ளவர்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான காரணத்தை நேற்று ஐசிஎமார் அமைப்பின் தலைவர் பல்ராம் பார்க்கவா கூறியுள்ளதாவது: இளைஞர்கள் பொதுவெளியில் அதிகம்நடமாடுகின்றனர். ஊரடங்கு அமலில் இருந்தாலும் அதை தாண்டிச் செல்லும்போது, நிச்சயம் பாதிப்படைகின்றனர். முந்தைய கொரொனா மற்றும் தற்போதைய கொரோனா இரண்டிலும் சுமார் 70% பேர் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான்.  மேலும் முதல் கொரொனா அலையின்போது, நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, 9.6% பேர் இறந்தனர். தற்போதைய 2 வது அலையின்போது,சுமார் 9.7% பேர் இறந்துவருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

முந்தைய அலையை விட இந்த 2 வது அலையின்போது, இளைஞர்கள் முதல் பெரியோர் வரை ஆக்ஸிஜன் சிலிண்டர் மூலம் சுவாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments