Publish Date: Mon, 23 Nov 2020 (22:02 IST)
Updated Date: Mon, 23 Nov 2020 (22:05 IST)
வேல் யாத்திரைக்காக நாளை தமிழக பாஜக தலைவர் முருகன் அரியலூர் வரவுள்ள நிலையில் பாஜக கொடிகட்டும் போது ஒரு இளைஞர் மின்சாரம் பாய்ந்து பலியானார்.
தமிழக அரசின் தடை உத்தரவை மீறி தமிழகத்தில் பாஜக தலைவர் முருகன் தலைமையில் வெற்றிவேல் யாத்திரை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நாளை பாஜக தமிழகத் தலைவர் முருகன் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டாம் வரவுள்ள நிலையில், பாஜக கொடியைக் கட்டும்போது, திடீரென்று பாய்ந்து சதீஸ் குமார் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.