Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கருப்பு பூஞ்சையை அடுத்து வெள்ளை பூஞ்சை தொற்று! நால்வருக்கு உறுதி!

கருப்பு பூஞ்சையை அடுத்து வெள்ளை பூஞ்சை தொற்று! நால்வருக்கு உறுதி!
, வியாழன், 20 மே 2021 (19:22 IST)
இந்தியாவில் கருப்பு பூஞ்சை தொற்று பரவி வரும் நிலையில் மற்றொரு நோயான வெள்ளைப் பூஞ்சை தொற்றும் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் 30 ஆயிரத்தை தாண்டியுள்ளன. இந்நிலையில் கொரோனாவிலிருந்து பலர் மீண்டு வந்தாலும் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பலருக்கு கரும்பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் இதுவரை 50 பேருக்கு இந்த தொற்று நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது அதே போன்ற மற்றொரு தொற்றான வெள்ளை பூஞ்சை தொற்று நான்கு பேருக்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தொற்றின் மூலம் நுரையீரல், நகங்கள், தோல், வாய் வயிறு, சிறுநீரகம், மூளை, பிறப்புறுக்களையும் பாதிக்கிறது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழந்த காவலர் குடும்பங்களுக்கு நிவாரணம்… தமிழக அரசு அறிவிப்பு