Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? புதிய தகவல்

Webdunia
ஞாயிறு, 3 மார்ச் 2019 (10:30 IST)
பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்க வாய்ப்பு உள்ள நிலையில் மார்ச் 8ஆம் தேதி தேர்தல் தேதியை அறிவிக்க தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
மார்ச் 6ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில தலைமைச்செயலாளர்கள் மாநாடு நடக்கவிருப்பதாகவும் அதனையடுத்து அன்றைய தினம் மாலையே அமைச்சரவை கூட்டம் நடைபெறவிருப்பதாகவும், இதனையடுத்து மார்ச் 8ஆம் தேதி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் கூறுகின்றன
 
மேலும் 2019ஆம் ஆண்டின் பாராளுமன்ற தேர்தல் ஏழு அல்லது எட்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்டமன்ற தேர்தலுக்கும் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது., மேலும் தமிழகத்தில் ஒரே கட்டத்தில் தேர்தல் நடக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments