திமுகவும், தேமுதிகவும் எண்ணெயும், தண்ணீரும் போன்றது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Webdunia
ஞாயிறு, 3 மார்ச் 2019 (09:59 IST)
திமுகவும், தேமுதிகவும் எண்ணெயும், தண்ணீரும் போன்றது என்றும் இரு கட்சிகளும் ஒட்டவே ஒட்டாது என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
 
அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளும் தேமுதிகவை தங்கள் கூட்டணியில் வளைத்து போடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. இரு கூட்டணியிலும் பேரம் பேசி வரும் தேமுதிக, தற்போது அதிமுக கூட்டணியை நெருங்கிவிட்டதாகவும் மிக விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் செய்திகளிடம் கூறியபோது, 'அதிமுக அமைத்துள்ளது ராஜ்ய கூட்டணி என்றும், திமுக அமைத்துள்ள கூட்டணி ஜீரோ கூட்டணி என்றும் ஜீரோவோடு எது சேர்ந்தாலும் ஜீரோதான் என்றும் கூறியுள்ளார். 
 
மேலும் பாஜகவிற்கு 5 சீட் கொடுத்த அதிமுக அடிமையா? அல்லது காங்கிரஸ் கட்சிக்கு 10 சீட் கொடுத்த திமுக அடிமையா? என மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார். மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தும் ஊராட்சி சபை கூட்டங்களைப் பார்த்து பொதுமக்கள் அவரை கிண்டல் செய்வதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments