Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தெருவில் இருந்து நாய்களை எல்லாம் அகற்றிவிட்டால், அடுத்து குரங்குகள் வரும். அப்போது என்ன செய்வீர்கள்? மேனகா காந்தி

Advertiesment
மேனகா காந்தி

Siva

, செவ்வாய், 12 ஆகஸ்ட் 2025 (09:36 IST)
டெல்லியில் தெரு நாய்கள் தொடர்பான பிரச்சினை குறித்து, முன்னாள் பாஜக எம்.பி.யும், விலங்கு நல ஆர்வலருமான மேனகா காந்தி எழுப்பியுள்ள கேள்வி, பொதுமக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
டெல்லியில் மட்டும் லட்சக்கணக்கான தெரு நாய்கள் இருப்பதாகவும், அவற்றுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய காப்பகம் ஒன்றை உருவாக்க 15,000 கோடி ரூபாய் தேவைப்படும் என்றும் மேனகா காந்தி சுட்டிக்காட்டினார். மேலும், அந்த நாய்களுக்கு உணவு வழங்க வாரத்திற்கு ஐந்து கோடி ரூபாய் செலவாகும் என்றும், இது சாத்தியமானதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
 
நாய் கடித்து ஒரு சிறுமி உயிரிழந்ததாக கூறப்படும் ஒரு போலி செய்தியை அடிப்படையாக கொண்டு, உச்ச நீதிமன்றம் கோபத்தில் நாய்களை அகற்றும்படி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. தெருவில் உள்ள நாய்களை எல்லாம் அகற்றிவிட்டால், அடுத்து குரங்குகள் வரும். அப்போது என்ன செய்வீர்கள்?" என்றும் மேனகா காந்தி கேள்வி எழுப்பினார்.
 
விலங்கு நலன் மற்றும் தெரு நாய்களின் பாதுகாப்பு குறித்த மேனகா காந்தியின் இந்த கருத்துக்கள், பொதுமக்களிடையேயும், விலங்கு ஆர்வலர்கள் மத்தியிலும் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம், தெரு நாய்களால் ஏற்படும் அச்சுறுத்தலை சுட்டிக்காட்டும் மக்கள், மறுபுறம், விலங்குகளின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறுபவர்கள் என இருதரப்பினரும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிரம்ப் மிரட்டலை துளி கூட மதிக்காத பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. 2வது நாளாக ஏற்றம்..!