Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டமைக்கப்பட்ட கதைகளுக்கு பயப்பட மாட்டேன்.. பாலியல் புகார் குறித்து மே.வங்க ஆளுனர்..!

Siva
வெள்ளி, 3 மே 2024 (07:59 IST)
மேற்குவங்க ஆளுநர் மீது பாலியல் புகார் சுமத்தப்பட்ட நிலையில் கட்டமைக்கப்பட்ட புகார்கள் குறித்து பயப்பட மாட்டேன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மேற்குவங்க ஆளுநர் சிவி ஆனந்த் போஸ் என்பவர் மீது ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் இதற்கு மேற்குவங்க ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த விளக்கத்தில் ’கட்டமைக்கப்பட்ட கதைகளுக்கு நான் பயப்பட மாட்டேன் என்றும் யாரேனும் என்னை இழிவுபடுத்தும் தேர்தல் ஆதாயம் பெற விரும்பினால் அவர்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் குற்றச்சாட்டு வைத்த ஊழியர் அரசியல் கட்சி நபர் போல் செயல்படுகிறார் என்றும் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மேற்குவங்க மாநில ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்