Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் வக்பு திருத்த மசோதா ரத்து செய்யப்படும்: மம்தா பானர்ஜி

Siva
வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (09:47 IST)
மத்தியில் புதிய அரசு அமையும் போது, வகுப்பு திருத்த மசோதா ரத்து செய்யப்படும் என மேற்குவங்க முதல்வர் கூறினார். 
 
மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்த மசோதா, பாராளுமன்றத்தின் மக்களவையும் மாநிலங்களவையும் நிறைவேறியுள்ளது,. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
 
இந்த நிலையில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இந்த மசோதாவுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டை பிரிப்பதற்காக வக்பு திருத்த மசோதாவை பாஜக கொண்டு வந்துள்ளதாகவும், மத்திய பாஜக அரசை அகற்றி புதிய அரசு அமையும் போது இந்த மசோதா ரத்து செய்யப்படும் என்றும், அதற்கான திருத்தத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வருவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
அப்போது கூட அவர் “இந்தியா” கூட்டணி அரசு அமையும் என்று சொல்லாமல், "புதிய அரசு" அமையும் என்று மட்டுமே கூறியுள்ளதால், இதற்குப் பின்னால் வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற கருத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments