Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவின் தலைநகரம் இதுதான்: முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (14:36 IST)
ஆந்திர மாநிலத்தின் தலைநகர் விசாகப்பட்டினம் என அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 
 
ஆந்திர மாநிலம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆந்திரா, தெலுங்கானா இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. ஐதராபாத்தை தலைநகராகக் கொண்டு தெலுங்கானா மாநிலம் செயல்பட்டு வந்த நிலையில் ஆந்திராவுக்கு என தலைநகர் உருவாக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு முயற்சி செய்தார். 
 
ஆனால் ஆந்திராவின் புதிய முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பொறுப்பேற்றவுடன் அந்த பணிகள் விசாகப்பட்டினம் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சற்றுமுன் அறிவித்த்ள்ளார். 
 
ஆந்திராவின் தலைநகரமாக விசாகப்பட்டினம் செயல்படும் என்றும் விரைவில் அரசு அலுவலகங்களின் நடவடிக்கைகள் அனைத்தும் விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments