விஐபி தரிசனம் ரத்து: திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 18 மே 2023 (14:12 IST)
கோடை விடுமுறை காரணமாக திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதை அடுத்து மூன்று நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 
 
திருப்பதியில் உள்ள திருமலை ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதும் குறிப்பாக கோடை விடுமுறை நேரத்தில் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் எண்ணிக்கை  அதிகரித்து வருவதாகவும் இதன் காரணமாக சுமார் 30 மணி நேரம் நீண்ட வரிசையில் இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
இந்த நிலையில் பக்தர்கள் வருகை அதிகம் இருப்பதன் காரணமாக விஐபி தரிசனம் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

சட்டீஸ்கரில் மர்மமான தம்பதி மரணம்: லிப்ஸ்டிக் எழுதிய குறிப்புகள் மூலம் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments