Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனித கழிவை சாப்பிட வைத்த கிராம மக்கள்!

மனித கழிவை சாப்பிட வைத்த கிராம மக்கள்!

Advertiesment
மனித கழிவை சாப்பிட வைத்த கிராம மக்கள்!
, சனி, 3 செப்டம்பர் 2016 (15:36 IST)
ஒடிசாவில் கிராம மக்கள் சேர்ந்து இரண்டு பேரை அடித்து உதைத்து, அவர்களை மனித கழிவை சாப்பிட வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.


 
 
ஒடிசாவின் காஞ்சம் மாவட்டத்தில் எஸ்பி ஜக்தேப்பூர் என்ற கிராமத்தில் இருண்டு சிறுவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் திடீரென பலியானார்கள். இந்த சிறுவர்கள் இருவரும்  பசுதேப் நாயக் மற்றும் பாஞ்ச்சா நாயக் இருவரின் மந்திரவாதத்தால் பலியானார்கள் என தகவல் பரவியது.
 
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் கிராம மக்கள் அந்த இருவரின் பற்களை உடைத்து, அவர்களை அடித்து மனித கழிவை சாப்பிட வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அந்த இருவரும் காவல்துறையில் எந்த புகாரும் அளிக்கவில்லை.
 
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அந்த கிராமத்திற்கு சென்று இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் ஒரு சில இடங்களில் கன மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்