Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியை வதைக்கும் குளிர்; டயர்களில் படுக்கை! – மாணவிக்கு குவியும் பாராட்டுகள்!

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (12:03 IST)
டெல்லியில் குளிர் வதைத்து வரும் நிலையில் பழைய டயர்களை படுக்கையாக்கி சாலையோர விலங்குகளை காப்பாற்றியுள்ளார் மாணவி ஒருவர்.

நாளுக்கு நாள் டெல்லியில் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. இதனால் மக்களே காலை விடிந்தும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சாலையோரம் வசிக்கும் நாய், பூனை உள்ளிட்ட விலங்குகள் குளிரை தாங்க முடியாமல் தவித்து வருகின்றன.

இதைக்கண்ட டெல்லி கால்நடை மருத்துவ மாணவி விபா தோமர் விலங்குகளுக்கு உதவ புதிய ஐடியாவை யோசித்துள்ளார். டெல்லியில் பயன்படுத்தப்பட்டு வீசப்பட்ட பழைய டயர்கள், கோணிப்பை ஆகியவற்றை சேகரித்து அவற்றில் விலங்குகள் படுத்துறங்கும் வகையில் படுக்கை தயாரித்துள்ளார். மேலும் அவற்றிற்கு குளிராமல் இருக்க ஆடைகளையும் தயாரித்து அணிவித்துள்ளார். அவரது இந்த விலங்குகள் மீதான அன்பிற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments