Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது நாளாக விபத்துக்குள்ளான ‘வந்தே பாரத்’ ரயில்!

Webdunia
சனி, 8 அக்டோபர் 2022 (09:58 IST)
இந்தியாவின் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் ஆன ‘வந்தே பாரத்’ ரயில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் எருமை மாட்டின் மீது மோதியதால் விபத்துக்குள்ளானது என்றும் இதனை அடுத்து மாட்டின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின
 
மேலும் இந்த விபத்து காரணமாக ‘வந்தே பாரத்’ ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குஜராத்தில் உள்ள ஆனந்த் ரயில் நிலையம் அருகே நேற்று பசு மாட்டின் மீது ‘வந்தே பாரத்’ ரயில் மோதியதால் சிறிய அளவில் சேதம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
‘வந்தே பாரத்’ரயில்கள் இயங்கும் பகுதியில் மாடுகள் மேய்ந்தால் மாடுகளின் உரிமையாளர்கள் தான் பொறுப்பு என்று ரயில்வே துறை எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments