Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வைகுண்ட ஏகதாசி டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியிடப்படும்- திருப்பதி தேவஸ்தானம்

Advertiesment
tirupathi
, புதன், 21 டிசம்பர் 2022 (22:17 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகதாசி டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியிடப்படும் என்று  தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி 2 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வைகுண்ட நுழைவாயில் திறப்படும் எனவும் 11 ஆம் தேதியிலிருந்து அடுத்த 10 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தரிசனத்திற்கு   நன் கொடை அளிக்கும் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்காக வரும் 22 ஆம் தேதி காலையில் 9 மணி முதல் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்றும் தினமும், 2 ஆயிரம் டிக்கெட்கள்  விநியோகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், வாணி அறக்கட்டளைக்கு ஒரு பக்தர் ரூ.10 ஆயிரம்  நன்கொடை செலுத்தி 300 தரிசன் டிக்கெட் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வளவு? சுகாதாரத்துறை