Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொழுகை செய்ய பேருந்தை நிறுத்திய நடத்துனர்.. சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் தற்கொலை..!

தொழுகை செய்ய பேருந்தை நிறுத்திய நடத்துனர்.. சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் தற்கொலை..!
, புதன், 30 ஆகஸ்ட் 2023 (15:07 IST)
பயணிகள் தொழுகை செல்வதற்காக பேருந்து நிறுத்திய நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பரேலி என்ற பகுதியில் பேருந்தில் பயணம் செய்த இரண்டு பயணிகள் தொழுகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க நடத்துனர் இரண்டு நிமிடம் பேருந்து நிறுத்திச் சொன்னதாக தெரிகிறது.  
 
ஆனால் அதே நேரத்தில் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று சில பேருந்து பயணிகள் கோரிக்கை விடுத்த நிலையில்  கூடுதலாக சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது 
 
இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் எந்தவித விசாரணையும் இன்றி நடத்துனர் மோகித் யாதவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா கூட்டணி: 3 வது ஆலோசனை கூட்டத்திற்கான அட்டவணை வெளியீடு