Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாராளுமன்றத்தில் வைக்கப்பட்ட செங்கோல்.. உபி முதல்வர் தமிழ் ட்வீட் வைரல்..!

பாராளுமன்றத்தில் வைக்கப்பட்ட செங்கோல்.. உபி முதல்வர் தமிழ் ட்வீட் வைரல்..!

Siva

, வியாழன், 27 ஜூன் 2024 (14:33 IST)
பாராளுமன்றத்தில் வைக்கப்பட்ட செங்கோலை எடுக்க வேண்டும் என்று எதிர் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் செங்கோல் பெருமை குறித்து உத்தரப்பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழில் ட்வீட் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ட்விட்டில் இருப்பது இதுதான்:
 
இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை.  'செங்கோல்'  பற்றிய அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டனத்துக்குரியது மட்டுமின்றி அவர்களின் அறியாமையையும் காட்டுகிறது. குறிப்பாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான இண்டி கூட்டணிக் கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது.
 
'செங்கோல்' இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள்  ஒன்று. மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாராளுமன்றத்தில் செங்கோலுக்கு உயரிய மரியாதையை அளித்து இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்துள்ளார்
 
Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேசிய தேர்வு முகமையில் 25 ஊழியர்கள் கூட இல்லை: காங்கிரஸ் அதிர்ச்சி தகவல்..!