Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண் குழந்தையை டிராக்டர் முன் வீசிய தாய்: அதிர்ச்சி வீடியோ!

பெண் குழந்தையை டிராக்டர் முன் வீசிய தாய்: அதிர்ச்சி வீடியோ!
, வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (11:47 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் பெண் குழந்தையை டிராக்டர் முன் வீசிய அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் இந்த வீடியோ  உத்தரபிரதேச மாநிலம் கோண்டாவில் இருந்து எடுக்கப்பட்டது. இது கர்னல்கஞ்ச் போலீஸ் வட்டத்திற்கு உட்பட்ட லாலே மாவ் கிராமத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவமாகும்.
அந்த வீடியோவில் ஒரு பெண் தனது பெண் குழந்தையை டிராக்டரின் முன் தூக்கி எறிகிறார். இதனால் ஓடிக்கொண்டிருந்த டிராக்டர் உடனடியாக நிறுத்தப்பட்டது. சரியான நேரத்தில் டிராக்டரை நிறுத்தி டிரைவர் அசம்பாவிதத்தை தடுத்தார்.

இரு சகோதரர்களுக்கு இடையே நிலத் தகராறு ஏற்பட்டது, அவர்களில் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தனது மற்றொருவரின் வயலை உழுது உரிமை கோர முயன்றார். எனவே டிராக்டர் முன்னோக்கி நகராமல் இருக்க, சகோதரர் ஒருவரின் மனைவி, தனது கைக்குழந்தையை டிராக்டர் முன் தூக்கி எறிந்தார்.

இந்த சம்பவம் முழுவதையும் உள்ளூர்வாசி ஒருவர் மொபைலில் படம்பிடித்து வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. எஸ்பி கோண்டா, ஆகாஷ் தோமர் வீடியோ கிளிப்பைப் பார்த்ததாகவும், இது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தைவானை சுற்றி வளைத்த சீனா: போர் ஒத்திகையால் பதற்றம்