Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மசூதிகளை தார்ப்பாய் போட்டு மூட வேண்டும்: ஹோலி பண்டிகையை முன்னிட்டு காவல் துறை உத்தரவு..!

Siva
புதன், 12 மார்ச் 2025 (17:52 IST)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஹோலி பண்டிகை முன்னிட்டு 10 மசூதிகளை தார்பாயால் மூட வேண்டும் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
 
60 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரிதாக இந்து மக்களால் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையும், முஸ்லிம்கள் கொண்டாடும் பண்டிகையும் ஒரே நாளில், அதாவது மார்ச் 14ஆம் தேதி வருகிறது. இதனை அடுத்து, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பல் பகுதியில் ஜும்மா மசூதி உள்பட 10 மசூதிகளை தார்பாயால் மூட வேண்டும் என காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இரு மதத்தைச் சேர்ந்தவர்களும் தங்களுடைய பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட சமூக நல்லிணக்கத்தை பேணுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சம்பல் எஸ்.பி தெரிவித்துள்ளார்.
 
எந்தவித குழப்பமும் பதட்டமும் இரு சமூகங்களுக்கு இடையே ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சம்பந்தப்பட்ட 10 மசூதிகள் தார்பாயால் மூடி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும், இது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள வழக்கமான ஒன்றுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments