Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் 6 கோடி பரிசு! – யோகி ஆதித்யநாத் அதிரடி அறிவிப்பு!

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் 6 கோடி பரிசு! – யோகி ஆதித்யநாத் அதிரடி அறிவிப்பு!
, சனி, 25 ஜனவரி 2020 (12:37 IST)
ஜப்பானில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் வெல்லும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு தலா 6 கோடி பரிசளிக்கப் போவதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜப்பானில் தொடங்க இருக்கிறது. பல்வேறு நாட்டிலிருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொள்ளும் இந்த ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி போட்டிகள் சென்ற ஆண்டு பல்வேறு நாடுகளில் நடைபெற்றன.

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் உத்தர பிரதேச வீரர்கள், வீராங்கனைகளுக்கு சிறப்பு பரிசை அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். அதன்படி ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு தங்கம் வெல்பவர்களுக்கு 6 கோடி ரூபாயும், வெள்ளி பதக்கம் வெல்பவருக்கு 4 கோடி ரூபாயும், வெண்கல பதக்கம் வெல்பவருக்கு 2 கோடி ரூபாயும் பரிசு தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்தியா சார்பாக ஜப்பான் ஒலிம்பிக்கில் பங்குபெறும் உத்தர பிரதேச வீரர்களுக்கு 10 லட்சம் ஊக்கத்தொகை வழங்குவதாகவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தான் இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும்; சிவசேனா