Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துயரத்தில் ஆழ்த்திய துர்கா பூஜை; தீ விபத்தில் சிக்கிய பக்தர்கள்!

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (10:32 IST)
உத்தர பிரதேசத்தில் துர்கா பூஜையில் ஏற்பட்ட தீ விபத்தில் பக்தர்கள் பலர் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் நவராத்திரி திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று உத்தர பிரதேச மாநிலம் பதோஹியில் பந்தல் அமைக்கப்பட்டு துர்கா பூஜை கொண்டாடப்பட்டு வந்தது.

அப்போது திடீரென அப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பந்தலில் பரவியதால் பலருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

ALSO READ: 3 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்த தீ விபத்தில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 33 பேர் ஆபத்தான நிலையில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துர்கா பூஜையில் சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் தீ விபத்தால் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

ரூ.55,000ஐ தாண்டியது தங்கம் விலை.. ஒரு லட்சத்தை தாண்டியது வெள்ளி விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! – மிஸ் பண்ணிடாதீங்க!

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments