Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் பணமதிப்பிழப்பு: ஆனால், இது வேறு....

மீண்டும் பணமதிப்பிழப்பு: ஆனால், இது வேறு....
, புதன், 10 ஜனவரி 2018 (19:04 IST)
கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு இந்தியாவையே கதிகலங்க விட்டார். இந்நிலையில், மீண்டும் பணமதிப்பிழப்பு என்றவுடன் அதிர்ச்சி அடையே வேண்டாம். இது வேறு தரப்பினரின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையாகும்.
 
உத்தரப்பிரதேசம் மாநிலம் ராம்பூரை சேர்ந்த பிச்சைக்காரர்கள், 1 ரூபாய் நாணயத்தை பணமதிப்பிழப்பு செய்துள்ளனர். அதாவது, அங்குள்ள பிச்சைக்காரர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்து வருகின்றனர். 
 
இதுபற்றி பிச்சைக்காரர்கள் தெரிவித்தபோது, தற்போதைய 1 ரூபாய் நாணயம் மிக சிறியதாக உள்ளது. இதனால் கடைக்காரர்கள், ரிக்ஷாக்காரர்கள் இதை ஏற்க மறுக்கின்றனர். எனவே, நாங்களும் இனி 1 ரூபாய் நாணயத்தை வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர். 
 
பொதுவாக பிச்சைகாரர்களுக்கு 1 ரூபாய் வழங்குவதை வழக்கமாக மக்கள் அனைவரும் வைத்துள்ளதால், இனி இரண்டு ரூபாய் முதல்தான் உத்தரப்பிரதேசத்தில் தானம் துவங்கும் என தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மஸ்கோத் அல்வாவிலிருந்து பீமபுஷ்டி அல்வாவாக மாறிய ஆளுநர் உரை!