Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டோடு இனி ஆதாரும் கட்டாயம்!!

மாணவர்களுக்கு  ஹால் டிக்கெட்டோடு இனி ஆதாரும் கட்டாயம்!!
, புதன், 15 நவம்பர் 2017 (16:16 IST)
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அதனை பலர் எதிர்த்தாலும், மத்திய அரசு எதிர்ப்புகளை கண்டுக்கொள்வதாக இல்லை.


 
 
இந்நிலையில், உத்தரபிரதேசத்திலும் 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என யோகி ஆதித்யநாத் அற்வித்துள்ளார்.
 
வரும் பொதுத்தேர்வின் முதல் இந்த விதுமிரை நடைமுறைக்கு வரும் என கூறபட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கல் அனைவரும் பிப்ரவரி 2018-க்குள் ஆதாரை பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 
 
பொதுத்தேர்வுக்கு பதிவு செய்யும் போதும், தேர்வு எழுத வரும் போதும் ஆதார் கொண்டு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆள்மாறாட்டத்தை தடுக்கவே ஆதார் அட்டை கட்டாயமாக்கபடுகிறது என காரணம் கூறப்பட்டுள்ளது. பள்ளி மாணவர் ஆதார் இல்லாமல் தேர்வு எழுத முடியாமல் போனால் அந்த பள்ளியின் முதல்வர் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டுமாம்.
 
பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்கள் ஹால் டிக்கெட்டோடு இனி ஆதார் கார்டையும் தேர்வு எழுதும் அறைக்கு கொண்டு செல்ல வேண்டும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது எங்கள் 100வது ரெய்டு - விவேக் வீட்டில் கேக் வெட்டி கொண்டாடிய அதிகாரிகள்