Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் பைடன்! தேதி அறிவிப்பு..!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (10:27 IST)
அமெரிக்கா அதிபர் ஜோபைடன் வரும் செப்டம்பர் மாதம் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.  
 
இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் ஜி 20 நாடுகளின்  கூட்டம் நடைபெற உள்ளது. 2023 ஆம் ஆண்டில் ஜி 20 தலைமையை இந்தியா பொறுப்பேற்ற நிலையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக செப்டம்பர் 7ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோபைடன் இந்தியாவுக்கு வர உள்ளார் என்றும் செப்டம்பர் பத்தாம் தேதி வரை ஜோபைடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.  
 
புதுடெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் பிரதமர் மோடியுடன்  இருநாட்டு கூட்டு முயற்சிகள் குறித்து ஜோபைடன் ஆலோசனை செய்ய உள்ளார்.  
 
மேலும் உக்ரைன் நாட்டில் நடைபெறும் போர், இந்தியா அமெரிக்கா ஆகிய  இருநாட்டின் பொருளாதார தாக்கங்கள் ஆகியவை குறித்தும் இரு தலைவர்கள் பேச உள்ளனர். 
 
அமெரிக்க அதிபரின் வருகையை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments