Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்சியில இல்லாட்டியும் யாத்திரை வருவேன்! – ராகுலின் கையை பிடித்த ஊர்மிளா!

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (08:24 IST)
நாடு முழுவதும் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில் அதில் நடிகை ஊர்மிளா மடோன்கரும் கலந்து கொண்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியை மீண்டும் வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவ்வாறாக அவர் சமீபத்தில் நடத்திய பார்த் ஜோடோ யாத்ரா என்ற தேசிய ஒற்றுமை நடைபயணம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் தொடங்கி பல மாநிலங்களை கடந்து தற்போது காஷ்மீரில் ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா நடந்து வருகிறது. இந்த யாத்திரையில் பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர் ராகுல் காந்தியின் கையை பிடித்தபடி பாதயாத்திரை மேற்கொண்டார். 2019க்கு பிறகு அவர் காங்கிரஸிலிருந்து விலகிய நிலையிலும் இந்த யாத்திரையில் கலந்து கொண்டார்.

அதுபோல தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன், லடாக் பிராந்திய காங்கிரஸ் தலைவர் நவங் ரிக்சின் ஜோரா உள்ளிட்ட பலரும் யாத்திரையில் கலந்து கொண்டனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments