Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'பாரத் ஜடோ யாத்திரை'யில் எம்பி சந்தோக் சிங் மரணம்!

jodo yatra
, சனி, 14 ஜனவரி 2023 (16:39 IST)
காங்கிரஸ்  கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை தமிழ் நாட்டின் கன்னியாகுமரியில் ஆரம்பித்து, தற்போது பஞ்சாம் மாநிலத்தில் நடந்து வருகிறது.

இந்த யாத்திரையில், ராகுல் காந்தியுடன் அந்த மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில்,  இன்றைய  பாதயாத்திரை பில்லெளர்  பகுதியில் வந்த காங்கிரஸ் மக்களவை எம்பி சந்தோக் சிங் சவுத்ரி திடீரென்று மயங்கி விழுந்தார்.

உடனே ஆம்புலஸ் மூலம் சந்தோக் சிங் பக்வாராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள்  அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக  கூறினர்.

எம்பி சந்தோக் சிங்கின் மறைவு அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவுக்கு அம்மாநில முதல்வர் பகவந்த் மான், காங்கிரச் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேவல் சண்டைக்கு நிபந்தனையுடன் நீதிமன்றம் அனுமதி