Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனிமேல் 10 வினாடிகள் தான்.. இன்று முதல் யுபிஐ பரிவர்த்தனைகளில் ஒரு முக்கிய மாற்றம்..!

Advertiesment
Gpay

Siva

, திங்கள், 16 ஜூன் 2025 (14:08 IST)
NPCI வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளால் யுபிஐ  பரிவர்த்தனைகள் முன்னெப்போதையும் விட இன்று முதல் வேகமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுவரை 30 வினாடிகள் எடுத்துக்கொண்ட பரிவர்த்தனைகள், இனி 15 வினாடிகளில் முடிவடையும். PhonePe, Google Pay, Paytm உள்ளிட்ட அனைத்து யுபிஐ செயலிகளுக்கும் இது பொருந்தும்.
 
பரிவர்த்தனை தோல்வியடைந்தால், முன்பு 30 வினாடிகள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இனி, வெறும் 10 வினாடிகளில் பணம் கழிக்கப்பட்டதா அல்லது திரும்ப வந்ததா என்பதை அறியலாம். இது பயனர்களுக்கு நிம்மதியை அளிக்கும்.
 
உதாரணமாக, ஒரு கடையில் க்யூ.ஆர். கோடு ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் முழு செயல்முறையும் இனி 15 வினாடிகளில் நிறைவடையும். நிலுவையில் உள்ள பரிவர்த்தனைகளை சரிபார்க்கவும் புதிய விதிகள் வந்துள்ளன. முன்பு 90 வினாடிகள் காத்திருக்க வேண்டும், இப்போது 45-60 வினாடிகளுக்குள்ளேயே சரிபார்க்கலாம். இதனால் தொழில்நுட்ப சிக்கல்களுக்கும் விரைவான தீர்வு கிடைக்கும்.
 
இந்த மாற்றங்கள் யுபிஐ பரிவர்த்தனைகளை விரைவுபடுத்துவதோடு, தோல்விகளால் ஏற்படும் குழப்பங்களையும் குறைக்கும். உடனடி உறுதிப்படுத்தல் கிடைப்பதாலும், விரைவான பதில்களாலும் பயனர்களுக்குக் கூடுதல் தெளிவும் நம்பிக்கையும் கிடைக்கும். நெட்வொர்க் கோளாறு போன்ற காரணங்களால் யுபிஐ சிஸ்டத்தை அடையாத பரிவர்த்தனைகள் தானாகவே தோல்வியடைந்ததாக குறிக்கப்படும். இது நேரத்தை சேமிக்கும்.
 
மொத்தத்தில் இன்று முதல் உங்கள் யுபிஐ கட்டண அனுபவம் இனி வேகமாகவும், நம்பகத்தன்மையுடனும் இருக்கும். பணம் செலுத்துவது வெற்றியடைந்ததா அல்லது தோல்வியடைந்ததா என்பதை விரைவாக அறிந்துகொள்ளலாம்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்மாவும் போலி, இறப்பு சான்றிதழும் போலி.. அரசு வேலை பெற நடந்த மாபெரும் மோசடி..!