மரங்களுக்கு ராக்கி கட்டிய மாணவர்கள்! – உ.பியில் விநோத முயற்சி!

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (14:48 IST)
இன்று நாடு முழுவதும் ரக்‌ஷபந்தன் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் உத்தர பிரதேச மாணவர்கள் மரங்களுக்கு ராக்கி கட்டிவிட்ட சம்பவம் ட்ரெண்டாகியுள்ளது.

இன்று நாடு முழுவதும் ரக்‌ஷாபந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனினும் கொரோனா தாக்கம் இருப்பதால் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்து வீடுகளில் இந்த பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த பண்டிகையின் போது ஆண்களும், பெண்களும் தங்கள் சகோதார, சகோதரிகளாக எண்ணுவோருக்கு ராக்கி அணிவிப்பது வழக்கம்.

இன்று பலர் தங்கள் சகோதர சகோதரிகளுக்கு ராக்கி கட்டிவிட்டு கொண்டாடி வரும் நிலையில் உத்தர பிரதேசத்தில் மாணவர்கள் மரங்களுக்கு ராக்கி கட்டியுள்ளனர். மனிதர்கள் வாழ இயற்கையின் அவசியத்தையும், அதே சமயம் மரங்கள் வளர்ப்பதன் அவசியத்தையும் வலியுறுத்துவதற்காக இந்த நூதன முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பீகார் முதல்வரும் தங்கள் மக்களிடம் மரங்களுக்கு ராக்கி கட்டுங்கள் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விரைவில் சண்முகம் மீது சட்ட நடவடிக்கை?.. டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை!..

செங்கோட்டையன் சொன்னது உண்மையா?!.. நிர்மலா சீதாராமன் விளக்கம்!..

வெறும் பென்சிலை வைத்து சுவரில் ஓட்டை போட்ட நபர்.. சுவர் அவ்வளவு பலவீனமா?

குண்டு வெடிப்புக்கு பின் 3 முறை போன் செய்தேன்.. பதிலில்லை: 26 வயது மகனை இழந்த தந்தை உருக்கம்.!

குழந்தை பெற்று டிஸ்சார்ஜ் ஆன பெண் உயிரிழப்பு.. சிறப்பு விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments