Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மின்கம்பியில் குரங்குகள் குதித்ததால் விபத்து.. ஷாக் அடித்து 2 பக்தர்கள் பலி..!

Advertiesment
உத்திரப் பிரதேசம்

Siva

, திங்கள், 28 ஜூலை 2025 (08:32 IST)
உத்தரப் பிரதேச மாநிலம் பரபங்கி மாவட்டத்தில் உள்ள அவ்னஸ்வர் மகாதேவ் கோவிலின் வெளியே இன்று அதிகாலை ஏற்பட்ட ஒரு தள்ளுமுள்ளு  சம்பவத்தில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒரு மின்சார கம்பி தகர கொட்டகை மீது விழுந்து, பலருக்கு மின் அதிர்ச்சி ஏற்பட்டதே இந்த சோகத்திற்குக் காரணம்.
 
சாவன் மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமையையொட்டி, இன்று அதிகாலை 3 மணியளவில் ஜலாபிஷேகம் செய்வதற்காக அவ்னஸ்வர் மகாதேவ்  கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். அப்போது, ஒரு பழைய மின்சார கம்பி அறுந்து தகர கொட்டகை மீது விழுந்துள்ளது. குரங்குகள் மின் கம்பிகள் மீது குதித்ததால் இது நிகழ்ந்ததாக மாவட்ட ஆட்சியர் சஷாங் திரிபாதி தெரிவித்தார்.
 
மின்சாரம் பாய்ந்ததில் சுமார் 19 பேர் மின் அதிர்ச்சிக்கு ஆளாகினர். அவர்களில், 22 வயது பிரசாந்த் மற்றும் அடையாளம் தெரியாத மற்றொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
 
 இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாய்கள் கருணைக்கொலை.. புதிதாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை: சுகாத்துறை விளக்கம்..!