Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடியை பற்றி பேசினால் உயிரோடு புதைப்பேன் – பாஜக அமைச்சர் மிரட்டல்!

மோடியை பற்றி பேசினால் உயிரோடு புதைப்பேன் – பாஜக அமைச்சர் மிரட்டல்!
, செவ்வாய், 14 ஜனவரி 2020 (16:46 IST)
உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற பாஜக பேரணியில் பேசிய அமைச்சர் மோடியை குறித்து பேசுபவர்களை உயிரோடு புதைத்து விடுவதாக மேடையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில் உத்தர பிரதேசத்தில் பாஜக கட்சியினர் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கூட்டம் நடத்தினர். துணை முதல்வர் கேசவ பிரசாத் மௌரியா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உத்தர பிரதேச அமைச்சர் ரகுராஜ்சிங் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர் நாடு முழுவதும் ஒரு சதவீதம் மக்களே குடியுரிமையை எதிர்ப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடியையும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் எதிர்ப்பவர்களை உயிரோடு புதைத்து விடுவதாகவும் பேசியுள்ளார். கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் அமைச்சரின் பேச்சு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. பொது வெளியில் வெளிப்படையாக கொன்றுவிடுவேன் என அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சத்ரபதி சிவாஜியும் மோடியும் ஒண்ணா? – சீறிய சிவசேனா, பதுங்கிய பாஜக!