Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாமரை பட்டனை அழுத்துவது பாகிஸ்தான் மீது குண்டு வீசுவதற்கு சமம் – துணை முதல்வர் பேச்சால் பரபரப்பு !

Webdunia
திங்கள், 14 அக்டோபர் 2019 (13:47 IST)
மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தின் போது உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தாமரை பட்டனை அழுத்துவது பாகிஸ்தான் மீது அனுகுண்டு வீசுவது போன்றது எனக் கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு வரும் 21 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியக் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா நேற்று தேர்தல் பிரச்சாரம் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

அவரது பேச்சின் போது ‘ ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கிய பின் நடக்கும் தேர்தல் என்பதால், இவ்விரு மாநிலத் தேர்தல்களும் அதிகமாகக் கவனிக்கப்படுகின்றன. இந்த தேர்தல்களில் மக்கள் தாமரை பட்டனை அழுத்துவது என்பது, பாஜக தலைவர்களுக்கு நன்மை செய்வது மட்டுமில்லாமல், பாகிஸ்தான் மீது தானாகவே அணுகுண்டு வீசுவதற்கு சமமாகும். இந்தியர்களின் தேசபக்தி இந்த தேர்தலில் தெரியும். பாஜகவின் ஒரு வாக்கைக் கூட அவர்களால் பிரிக்க முடியாது.’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments