Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசின் கொரோனா அன்லாக் 3.0 விதிமுறைகள் அறிவிப்பு: என்னென்ன தளர்வுகள்/

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (19:33 IST)
மத்திய அரசின் கொரோனா அன்லாக் 3.0 விதிமுறைகள் அறிவிப்பு:
நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த அன்லாக் 2.0 வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைவதை அடுத்து சற்றுமுன் அன்லாக் 3.0 விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் பின்வருமாறு:
 
* இந்தியா முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும் தீவிர லாக்டவுன் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆகஸ்ட் 31 வரை லாக்டவுன் தொடரும்
 
* யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் திறப்பதற்கு ஆகஸ்ட் 5 முதல் அனுமதி
 
* பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இயங்காது
 
* சுதந்திர தின கொண்டாடட்டத்திற்கு அனுமதி உண்டு. ஆனால் சமூக இடைவெளியுடன் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்
 
* திரையரங்குகள், மெட்ரோ ரயில் சேவை, நீச்சல் குளம், பார்களுக்கு அனுமதி இல்லை. இவைகளை திறப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்
 
* விளையாட்டு போட்டிகள், மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு தடை தொடர்கிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments