Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நேற்றைவிட இன்று குறைந்த கொரோனா பாதிப்பு: டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் அதிகரிப்பு

நேற்றைவிட இன்று குறைந்த கொரோனா பாதிப்பு: டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் அதிகரிப்பு
, புதன், 29 ஜூலை 2020 (18:26 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 6426 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை நேற்றைவிட இன்று குறைவு என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,34,114 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 6426 பேர்களில் 1117 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 97,575 
ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 82 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 3741 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 5927 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 1,72,883  ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 58,818  பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24,42,482 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

webdunia

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அது ரஃபேல் விமானம் இல்ல முருகேசா! – கலாய் வாங்கிய உ.பி அமைச்சர்!