Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிட்டனிலிருந்து 1200 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்! – இன்று இந்தியா வந்தது!

Webdunia
வியாழன், 13 மே 2021 (11:12 IST)
பிரிட்டனிலிருந்து இந்தியாவின் ஆக்ஸிஜன் தேவைக்காக அனுப்பப்பட்ட ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இன்று இந்தியா வந்தடைந்தது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகரித்துள்ளனர். தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில் உலக நாடுகள் பல இந்தியாவிற்கு ஆக்ஸிஜன் மற்றும் மருந்து பொருட்களை அனுப்பி வருகின்றன. அந்த வகையில் பிரிட்டனில் உள்ள ஆக்ஸிஜன் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவிற்காக 1200 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அனுப்பியுள்ளது. கத்தார் ஏர்லைன்ஸின் சரக்கு விமானம் மூலமாக இந்தியா வந்த இந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஆக்ஸிஜன் தேவை உள்ள மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments