தேர்தலை முன்னிட்டே உலக ஐயப்ப சங்கமம் மாநாடு: காங்கிரஸ் குற்றச்சாட்டு..!

Siva
புதன், 3 செப்டம்பர் 2025 (21:53 IST)
சபரிமலையில் நடைபெற உள்ள 'உலக ஐயப்ப சங்கமம்' மாநாட்டில் பங்கேற்பது குறித்து, கேரள அரசு பதிலளித்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று கேரள காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 
 
கடந்த ஒன்பது ஆண்டுகளாக எந்த நிகழ்வையும் நடத்தாத அரசு, 2026 சட்டமன்றத்தேர்தலுக்கு முன் இப்போது 'ஐயப்ப சங்கமம்' மாநாட்டை நடத்துவதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக கேரள காங்கிரஸ் கட்சியின் சதீசன் விமர்சித்தார். 
 
காங்கிரஸ் கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், இது அரசியல் உள்நோக்கம் கொண்ட அறிக்கை என்று நிராகரித்தார். "அவர்களுக்குள்ளேயே கவலை இருப்பதால், இப்படிப்பட்ட அறிக்கைகளை வெளியிடுகிறார்கள்," என்று அவர் கூறினார்.
 
சபரிமலை ஐயப்பன் கோவில் நிர்வாகத்தின் 75ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு மற்றும் கேரள அரசு இணைந்து செப்டம்பர் 20 அன்று பம்பாவில் 'உலக ஐயப்ப சங்கமம்' மாநாட்டை நடத்த உள்ளன. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி பாலைவன காற்றிலிருந்து நீரை பிரித்தெடுத்தெடுக்கலாம்.. வேதியியல் நோபல் பரிசு பெற்ற மூவரின் சாதனை..!

16 வயது மாணவனை கத்தியால் குத்திய தலைமை காவலர்.. தூத்துகுடியில் பரபரப்பு..!

இனி ரிவார்டு புள்ளிகளை பணமாக்கி கொள்ளலாம்.. டிஜிட்டல் பேமெண்ட்டில் புதிய புரட்சி செய்யும் செயலி..!!

ஒரே இரவில் கோடீஸ்வரர்: பெயிண்ட் கடை ஊழியருக்கு ரூ. 25 கோடி ஓணம் பம்பர் லாட்டரி! மறுநாளே வேலைக்கு சென்ற அதிசயம்..!

வெளிநாட்டுக்கு கட்டாயம் செல்ல வேண்டுமா? ரூ.60 கோடி கட்டிவிட்டு செல்லுங்கள்.. ஷில்பா ஷெட்டிக்கு நீதிமன்றம் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments