Publish Date: Mon, 02 Nov 2020 (16:59 IST)
Updated Date: Mon, 02 Nov 2020 (17:25 IST)
காங்கிரஸ் நிர்வாகி ஒருவரை இரண்டு பெண்கள் சரமாரியாக செருப்பால் தாக்குவது போன்ற காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தில், ஜலான் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகியாக இருப்பவர் அனுஜ் மிஸ்ரா. இவர் பல பெண்களுக்கும் பாலியல் தொல்லைக் கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இவர் மீது புகார் அளித்தால் கட்சியினரோ அல்லது போலீஸாரோ எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இவர் பாலியல் தொல்லை கொடுத்த மாயா மற்றும் வர்ஷா என்ற இரு பெண்களும் அவரை பொதுவெளியில் வைத்து செருப்பால் அடிக்க அது சம்மந்தமானக் காட்சிகள் இணையத்தில் பரவின. இந்த சம்பவமானது உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.