Publish Date: Fri, 19 Nov 2021 (19:32 IST)
Updated Date: Fri, 19 Nov 2021 (19:35 IST)
திருப்பதிக்கு செல்லும் 2 மழை பாதைகளும் மூடப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திருப்பதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கனமழை காரணமாக திருப்பதி செல்லும் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது
இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் இரண்டு மலைப்பாதைகளும் மூடப்பட்டன என்பது குறிபிடத்தக்கது. மண்சரிவு சரி செய்யப்பட்டவுடன் தான் மலைப்பாதைகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது