Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்ற இருவர்? - பஞ்சாபில் அதிர்ச்சி!!

Prasanth Karthick
திங்கள், 5 மே 2025 (11:35 IST)

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் உள்ள நிலையில் இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு அளித்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

காஷ்மீரில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு இந்தியா பல தடைகளை விதித்த நிலையில், பாகிஸ்தானும் இந்தியாவிற்கு தடைகளை விதித்துள்ளது. இரு நாட்டு எல்லைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் ராணுவம் போர் ஒத்திகையிலும் ஈடுபட்டு வருகிறது.

 

இந்நிலையில் இந்தியாவின் ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்டதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபை சேர்ந்த பாலக் ஷேர் மாஸி மற்றும் சூரஜ் மாஸி என்ற இருவரும், இந்திய ராணுவத்தின் கண்டோன்மண்ட் பகுதிகள், அமிர்தசரஸில் உள்ள இந்திய ராணுவ விமான தளம் ஆகியவற்றின் லொக்கேஷன் மற்றும் தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளனர் என அம்மாநில டிஜிபி கவுரவ் யாதவ் தெரிவித்துள்ளார். அவர்கள் பாகிஸ்தானி ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்காக உளவாளிகளாக வேலைப்பாரத்தாக கூறப்படுகிறது.

 

ஏற்கனவே இரு நாடுகளிடையே போர் மூளும் சூழல் உள்ள நிலையில் இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடந்து செல்லும் பக்தர்களுக்கு அலிபிரி வரை இலவச பஸ்கள்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

சபரிமலையில் பக்தர்களுக்கான முன்பதிவு நிறுத்தம்: என்ன காரணம்?

துருக்கியில் இருந்து பாகிஸ்தான் வந்த போர்க்கப்பல்.. இந்தியாவை தாக்கவா?

தங்கம் விலை இன்று சிறிய அளவில் ஏற்றம்.. ஆனால் சரிய வாய்ப்புள்ளதாக தகவல்..!

வாரத்தின் முதல் நாளே அமோகம்.. இந்திய பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments