Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத்திற்கு வந்து பிரதமர் அறிக்கை தரும் வரை விடமாட்டோம்: மணிப்பூர் விவகாரம் குறித்து திருச்சி சிவா..!

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (07:57 IST)
மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்துக்கு வந்து பிரதமர் அறிக்கை தரும் வரை விட மாட்டோம் என திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார். 
 
 மணிப்பூர் பிரச்சனை கொழுந்து விட்டு எரியும் நிலையில் பிரதமர் இது வரை இது குறித்து பேசவில்லை. குறைந்தபட்சம் நாடாளுமன்றத்திற்கு வந்து ஒரு அறிக்கை அளித்து இருக்க வேண்டும். 
 
மணிப்பூரில் தற்போது மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்டு கொடுமைகள் நடந்து கொண்டிருக்கிறது. இன்று நாங்கள் ஒரு குழுவாக மணிப்பூர் செல்ல இருக்கிறோம். மக்கள் இந்த பிரச்சனையை கவனித்துக் கொண்டிருக்கும் நிலையில் மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு எதிர்க்கட்சிக்கு தயாராக இல்லை என்று சொல்வதில் உண்மை இல்லை 
 
பிரதமர் வந்து நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும், அப்போது நாங்களும் பேச தயார், அவர் அறிக்கை அளிக்கும் வரை நாங்கள் அவரை விட மாட்டோம் என்று திருச்சி சிவா எம்பி பேட்டியில் கூறியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரக்ஷா பந்தன் கொண்டாடிய ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி.. வைரல் புகைப்படம்..!

போதைப்பொருள் உற்பத்தி செய்ய ரகசிய ஆய்வகங்கள்.. மடக்கி பிடித்து கைது செய்த போலீஸ்..!

தவெக மதுரை மாநாடு: விஜய் மட்டுமே பேசுவார்.. காவல்துறைக்கு அளித்த தகவல்..!

3 நாட்களாக உயர்ந்த தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

வெனிசுலா அதிபரை கைது செய்ய உதவினால் ரூ.483 கோடி பரிசு: அமெரிக்க அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments