Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் டிக்கெட் கட்டணத்தை தனியாரே நிர்ணயிக்கும்: ரயில்வே அதிரடி!

Webdunia
வியாழன், 13 பிப்ரவரி 2020 (13:48 IST)
ரயில் டிக்கெட் விலையை இனி தனியாரே நிர்ணயிக்கும் என ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் கூறியுள்ளார். 
 
பயணிகளின் நலன் கருத்து இந்திய ரயில்வே இன்னும் ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளில் கூடுதலாக 1,500 முதல் 2000 ரயில்களை இயக்கும் என தெரிகிறது. இந்த கூடுதல் ரயில்களையும் அரசே நிர்வகிக்க முடியாத காரணத்தால் அவர் தனியாரிடம் வழங்கப்படும் என தெரிகிறது. 
 
இந்நிலையில் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் ரயில்களின் கட்டணத்தை தனியாரே நிர்ணையிக்கும் என தெரிகிறது. இது குறித்து ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் கூறியதாவது, 
 
தனியாரால் இயக்கப்படும் பயணிகள் ரயில்களுக்கு கட்டண வரம்பு நிர்ணயிப்பது குறித்து அரசிடம் எந்த பரிசீலனையும் இல்லை. எனவே,  பயணிகள் ரயில்களை இயக்கவிருக்கும் தனியார் ரயில் நிறுவனங்கள் சந்தை நிலவரத்தைச் சார்ந்து தாங்கள் விரும்பும் எந்தக் கட்டணத்தையும் நிர்ணயித்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments