Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ப்ரோமோஷனுக்காக வெளிநாடு சென்ற ஐ டி ஊழியர் ! மேலதிகாரியின் தகாத செயல் !

ப்ரோமோஷனுக்காக வெளிநாடு சென்ற ஐ டி ஊழியர் ! மேலதிகாரியின் தகாத செயல் !
, வெள்ளி, 17 ஜனவரி 2020 (08:58 IST)
சென்னையில் உள்ள பிரபலமான ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் தனது ப்ரமோஷனுக்காக வெளிநாடு செல்ல அப்போது அங்கு மேல் அதிகாரியால் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியுள்ளார்.

சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று அந்நிறுவனம். அதில் வேலை செய்யும் பெண் ஒருவர் அப்ரைசல் விஷயம் தொடர்பாக வெளிநாடு அனுப்பப்பட்டுள்ளார். அங்கு அவரை நேர்காணல் செய்த மேல் அதிகாரி ஒருவர் அவரிடம் தவறுதலாக நடந்துள்ளார். அவருக்கு உடன்படாத அந்த பெண் நிறுவனத்தின் மேல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

ஆனால் எந்த  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அவர் நீதிமன்றத்தை நாட, நிறுவனம் சார்பில் அந்த பெண் சொல்லும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என வாதிட்டுள்ளனர். இதனால் அங்கும் அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை. வழக்கு முடிந்த நிலையில் அந்த பெண்ணை வேறு ஒரு கிளைக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது நிறுவனம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அலங்காநல்லூரில் பாய்ந்த அமைச்சரின் கொம்பன்கள்: அடக்கமுடியாமல் வீரர்கள் தவிப்பு!