Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து 12 மாணவர்கள் பலி!

Sinoj
வியாழன், 18 ஜனவரி 2024 (21:05 IST)
குஜராத் மாநிலத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில், 12 மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்  மாநிலம்  வதோதரா நகரில்  ஹரணியில் உள்ள  மோட் நாத் ஏரியில் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் படகு சவாரியில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதில், 23 பள்ளி மாணவர்களும், 4 ஆசிரியர்களும் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமான படகு மூழ்கி 2 ஆசிரியர்கள் உள்ளிட்ட 12 மாணவர்கள் பலியாகினர்.

மீட்பு பணிகள்  நடந்து வருகிறது. குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலா படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். அதேபோல், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி அளித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments