Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உபியில் இன்று முதல் கட்ட தேர்தல்: 50 ஆயிரம் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு!

உபியில் இன்று முதல் கட்ட தேர்தல்: 50 ஆயிரம் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு!
, வியாழன், 10 பிப்ரவரி 2022 (07:45 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மார்ச் பத்தாம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது என்பதை பார்த்தோம்.
 
இந்த நிலையில் அம்மாநிலத்தில் என்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உதவும் இந்த பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து பாதுகாப்புக்காக துணை ராணுவப் படையினர் 50 ஆயிரம் பேர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு பணியை அவர்கள் மேற்கொள்வார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று தேர்தல் நடைபெற உள்ள இடத்தில் மாநில மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் உயர்த்தப்படும் ஏர்டெல் கட்டணம்: அதிர்ச்சியில் பயனாளிகள்