Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் 55 ஆயிரத்தை நெருங்கிய இன்றைய கொரோனா பாதிப்பு!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (19:11 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த போது கூட கேரளாவில் அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று கேரளாவில் 55 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு நெருங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 54 ஆயிரத்து 537 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
மேலும் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்களில் 30 ஆயிரத்து 225 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளதாகவும், இன்று ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 பேர் என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது
 
மேலும் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை  3,33,447  என அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நேர கட்டுப்பாடு.! காலை 9.15-க்குள் வராவிட்டால் என்னவாகும் தெரியுமா.?

பஞ்சாப் எல்லையில் பறந்த மர்ம ட்ரோன்.. சீனாவை சேர்ந்ததா?

குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பது சினிமா டைட்டிலில் மட்டும் தான்: ராமராஜன் கண்டனம்..!

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு.! திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments