Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே நாளில் 2.86 லட்சம் பேருக்கு கொரோனா! – இந்தியாவில் கொரோனா!

ஒரே நாளில் 2.86 லட்சம் பேருக்கு கொரோனா! – இந்தியாவில் கொரோனா!
, வியாழன், 27 ஜனவரி 2022 (10:03 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் கடந்த 3 நாட்களாக குறைந்து வருகிறது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் மீண்டும் மிக வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,86,384 பேருக்கு கொரோனாஉறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,03,71,500 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 573 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,91,700 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,76,77,328 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 22,02,472 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரயிலுக்கு தீ வைத்த விவகாரம்; போராட்டத்தை தூண்டிவிட்ட யூட்யூபர்! – போலீஸார் வழக்குப்பதிவு!