Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரேநாளில் 1.7 லட்சம் பாதிப்புகள்; அதிர்ச்சியில் மக்கள்! – இந்தியாவில் கொரோனா!

ஒரேநாளில் 1.7 லட்சம் பாதிப்புகள்; அதிர்ச்சியில் மக்கள்! – இந்தியாவில் கொரோனா!
, திங்கள், 10 ஜனவரி 2022 (09:36 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் ஒரே நாளில் 1 லட்சம் பாதிப்புகளை தாண்டியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் மீண்டும் மிக வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,57,07,727 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 146 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,83,936 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,45,00,172 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 7,23,619 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவுக்கு பயந்து குடும்பமே தற்கொலை! – மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!